2025 ஜூன் 28, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்கு 20,000 ரூபாயும் மற்றைய நபருக்கு  10,000 ரூபாய் அபராதமும் வித்திது அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்க்கிழமை (23) தீர்ப்பளித்தார்.

திருக்கோவில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு அபராதம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .