2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி எச்.ஏ.அலி சப்றி, இணைப்புச் செயலாளர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.வாஹீட், மீரா.எஸ்.இஸ்ஸதீன், உதவிப் பிரதேச  செயலாளர் எஸ்.திரவியராஜ், பிரதம கணக்காளர் ஏ.எம்.நிசாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், மாதமொன்றுக்கு ரூபாய் மூவாயிரம் படி ஆறுமாதங்களுக்கான தொகை இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .