Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 25 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவிலில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை நேற்று புதன்கிழமை (24) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் சாகாம பகுதியிலிருந்து அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு சட்டவிரோதமாக ஐந்து பசு மாடுகளை சிறியரக டிப்பர் வண்டியில் கொண்டு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விரைந்து சென்ற பொலிஸார் திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் வந்த இருவர் உட்பட பாதுகாப்புக்காக மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் என நால்வரை கைது செய்தனர்.
இதேவேளை, மாடுகளை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட சிறிரக டிப்பரையும் சந்தேகநபர்கள் இருவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago