2025 ஜூன் 28, சனிக்கிழமை

அம்பாறையில் அனோமா வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தார்

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்

அம்பாறைக்கு இன்று வியாழக்கிழமை(25) விஜயம் செய்த, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாய, நீர்ப்பாசன பிரதியமைச்சருமான திருமதி.அனோமா கமகே, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகிபுரம், நாவக்காடு ஆகியபிரதேசங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகளை பொதுமக்களின் பாவனைக்கு கையளித்தார். 

அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 160 பேருக்கு 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உபகரணங்கள் பிரதியமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அனோமா உரையாற்றுகையில், 

'நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு வாக்களிக்க வேண்டும'; என்றார்.
'குறிப்பாக அம்பாறை மாட்டத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

முதற்கட்டமாக வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் நீங்களும் வாக்களித்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்துள்ளீர்கள். 

ஆனால், எமக்கு சரியான  அதிகாரம் வழங்கப்படவில்லை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு சரியான முறையில் வாக்களியுங்கள் உங்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகேயின் இணைப்பாளர் எம்.எம்.நிஸாம், உட்பல பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .