Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 25 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கள்ளு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 10 நபர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று புதன்கிழமை (24) தீர்ப்பளித்தார்.
கல்முனைப் பிராந்திய மது வரி திணைக்கள அதிகாரிகள் பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
27 Jun 2025