2025 ஜூன் 28, சனிக்கிழமை

கதிர்காமத்துக்கான பாதயாத்திரை

Princiya Dixci   / 2015 ஜூன் 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தினூடாக கதிர்காமத்துக்கு காட்டுப்பாதை ஊடாக பாதயாத்திரையை அடியார்கள் மேற்கொண்டுள்ளனர். 

கடந்த 20ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து பயணத்தை தொடங்கிய பாதை யாத்திரியர்கள், இன்று வெள்ளிக்கிழமை (26) அம்பாறை, அட்டாளைச்சேனையை வந்தடைந்தனர். 

கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தீர்த்தோற்சத்துடன் நிறைவடையவுள்ளது.

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தினூடாக கதிர்காமத்துக்கு பாதயாத்திரியை மேற்கொள்ளும் பாதயத்திரிகளுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்பட்டு 26ஆம் திகதி மீண்டும் மூடப்படும்.

தினமும் காலை 5.30 மணி முதல் மாலை 04 மணி வரை இக்காட்டுப்பாதை திறந்திருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .