Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kanagaraj / 2015 ஜூன் 27 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து பொது மக்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து பிரதேசத்தில் அமைதி நிலைமையை ஏற்படுத்தும் வகையில் இன்று 27ஆம் திகதி விநாயகபரம் சக்தி வித்தியாலயத்தில் சிவில் பாதுகாப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் தலைமையில்
இடம்பெற்றது.இதன்போது திருக்கோவில்,அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.ஹேமந்த கேக்கோவிட்ட பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிசாருக்கம், பொது மக்களுக்கும் உள்ள தொடர்புகள், பொலிசாரின் கடமைகள் சட்ட ஒழுங்குகள் சம்மந்தமாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மதுபாவனைகள் ஏனைய சட்டத்துக்க விரோதமான செயற்பாடுகள் சம்மந்தமாகவும் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டது.
இதன்போது பொது மக்களால் பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்ட போது அவ் குறைபாடுகளை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டுமென்றால் இப்பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் ஒத்துழைப்புக்கள் பொலிசாருக்கு தேவைப்படுவதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோல் பதில் வழங்கியிருந்தார்.
இவ் பிரதேச சிவில் பாதுகாப்பு சந்திப்பபுக்கு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 150க்கு மேற்பட்ட பொது மக்களும் கிராம சேவர்களும் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு இருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025