Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தினால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் சித்திரப் போட்டிகள் என்பவற்றில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (27) நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் ஏ.ஏ. அஸீஸ் தலைமையில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் முகாமையாளர்களான ஏ.எம். இப்ராஹீம், ஏ.ஏ. மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ. றஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை மற்றும் சித்திரப்போட்டிகள் நடாத்தப்பட்டு மத்தியஸ்தர்களால் அதே இடத்தில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய ஏனைய மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை தேசிய வீடமைப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025