2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சான்றிதழ் வழங்கும் வைபவம்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் 

தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தினால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்றது. 

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் ஏ.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர்களான ஏ.எம். இப்ராஹீம், ஏ.ஏ. மஜீட் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் எம்.எஸ்.ஏ. றஹீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X