2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சரஸ்வதி வித்தியாலய வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.எம்.எம்.றம்ஸான் 

அம்பாறை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பிரதேசத்திலுள்ள சரஸ்வதி வித்தியாலய வீதி, நீண்டகாலம் புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதி வழியே பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 300 மீற்றர் நீளமான சரஸ்வதி வித்தியாலய வீதி வழியே சுனாமி வீட்டுத்திட்டங்களுக்கும் ஆலையடிப் பிள்ளையார் ஆலயத்துக்கும் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்த வீதியை புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்டபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இவ்வீதியை புனரமைக்க சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கல்முனை மாநகர மேயர் கருத்து தெரிவிக்கையில்,

மாநரசபையால் ஒவ்வொரு கிராமத்துக்குமான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வேலைத்திட்டங்களை இனங்காண்பதும் முன்மொழிவதும் நாங்கள் அல்ல. பெரிய நீலாவணை கிராம மக்களின் தேவைகளை அப்பிரதேச மாநகர மக்கள் பிரதிநிதி இனங்கண்டு முன்னுரிமையின் அடிப்படையில் பட்டியல் படுத்தி அதற்கான நிதியை உரிய முறைப்படி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும். இதுதான் வழமை.

ஆனால், குறித்த பிரதேசத்திலிருந்து இதுவரை சரஸ்வதி வித்தியாலய வீதி தொடர்பாக எவ்வித முன்மொழிவுகளும் மாநகர சபைக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .