Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 01 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம். ஹனீபா
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க எத்தனிக்கும் தீய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, திங்கட்கிழமை (29) நடைபெற்ற போது மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், நற்பிட்டிமுனை மைதான அபிவிருத்திக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் தொடர்பில் பிரஸ்தாபித்தபோது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக முதல்வர் கொண்டு வந்த திட்டமானது அனைவரது இணக்கப்பாட்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் சில வழுக்கள் இருக்கலாம். அதற்காக மைதான அபிவிருத்திப் பணிகளை முற்றாக நிறுத்தி விட முடியாது. தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால், புதிததாக அரசியல் முகவரிகள் தேடுகின்ற சிலர் இம்மைதான அபிவிருத்தித் திட்டத்தை முடக்குவதற்கு சதி செய்கின்றனர்.
எனவே, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மைதான அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் முதல்வர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago