2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

1999ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் தொண்டர்களாக வைத்தியசாலைகளில் சேவை புரிந்துவந்த அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு  முன்பாக  நேற்று வியாழக்கிழமை அமைதியான முறையில்  கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்போது தங்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுத்த சுகாதாரத் தொண்டர்கள், 'நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடு', 'சுகாதாரத் தொண்டர்களாக வேலை செய்வதை உறுதி செய்', 'நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்து' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

இறுதியில் சுகாதாரத் தொண்டர்களாக கடமை புரிந்தவர்களின் பெயர்ப்பட்டியலுடன் மகஜரொன்றையும்  கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனிடம்; கையளித்தனர்.

மகஜரை  பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர், இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் சுகாதார பணிப்பாளரின்; கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததாக  சுகாதார தொண்டர் அமைப்பின் தலைவர் ஐ.எம்.இப்ராலெப்பை முகமட் நபிர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .