2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலைக்குச் சென்ற யுவதி மாயம்

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனை வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்ற 17 வயதான யுவதியொருவர் காணாமல் போயுள்ளார் என  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை போரக் கோவில் வீதியைச் சேர்ந்த போரக் கோயில் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் ஜோசப் காஞ்சனா (வயது 17) என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக அவரது தாய் முத்து அரசம்மா (வயது 37) முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

வெள்ளிக்கிழமை மாலை கல்முனை ஜேசு ஜீவிக்கிறார் தேவாலயத்தில் பிரார்த்தனைக்குச் சென்று விட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருந்தெடுப்பதற்காக குறித்த மாணவியும் அவரது தாயும், தங்கையும், அயல்வீட்டில் வசிக்கும் சிறுவனும் சென்றுள்ளனர்.

அப்பொழுது வைத்தியசாலைக் காவலாளி எல்லோரும் உள்ளே செல்ல முடியாது சிகிச்சை பெறும் நோயாளியும் உதவிக்கு இன்னொருவரும் மாத்திரமே உள்ளே செல்லலாம் என்று கூறியுள்ளார்.

அதன்படி தாயும் தங்கையும் வைத்தியசாலையின் உள்ளே செல்ல குறித்த யுவதியும் பக்கத்து வீட்டுச் சிறுவனும் வைத்தியசாலை வாயிற் கதவடியில் நின்றுள்ளனர்.

அப்பொழுது அங்கு நின்ற யுவதி சிறுவனும் அறியாத விதத்தில் திடீரெனக் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலிஸுக்கு முறைப்பாடு கிடைத்ததும் பொலிஸார் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .