2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுற்றுலா விடுதியில் திருட்டு

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் இயங்கி வரும் ஹைட்வே சுற்றுலா விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மூன்று அறைகளை உடைத்து 60,000 ரூபாய் பணமும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அது தொடர்பில் சுற்றுலா விடுதியின் உரிமையாளர் இன்று புதன்கிழமை (08) பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
இவ்விடுதியிலிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடையதென தெரிய வந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் அப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .