2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாராயம் வைத்திருந்தவருக்கு சிறை

Princiya Dixci   / 2015 ஜூலை 08 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மூன்று மாதகால சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று புதன்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (08) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .