2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2015 ஜூலை 10 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மவாட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10) மேற்கொண்ட பகிஷ்கரிப்பு நடவடிக்கை, ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகேயின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டது.

அம்பாறையிலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான சேவையில் இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இன்று மேற்கொண்ட பஸ் சேவையை கண்டித்தே இப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்தை இடைநிறுத்தியதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தயாகமகே, ஊழியர்களை சமரசம் செய்தது, அம்பாறை பஸ் நிலைய போக்குவரத்து அட்டவணை தொடர்பில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தார்.

தயாகமகேயின் உறுதிமொழியை அடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்ட போக்குவரத்து பணிப் பகிஷ்கரிப்பு தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .