Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 10 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பாலமுனை தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால் ஒரு இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியினைக் கையளிக்கும் வைபவம், நேற்று வியாழக்கிழமை (09) மாலை தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ்.லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினரும் முன்னாள் செயலாளருமான எம். பரீட் கலந்துகொண்டு இதற்கான காசோலையினை கையளித்தார்.
இந்நிகழ்வில் தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் என்.எம்.றிஸ்வான், முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.பி.இஸ்மாலெவ்வை, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் சார்பில் மௌலவி ஏ.எல். மௌஜூத் மற்றும் எம்.ஆதம்லெவ்வை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கட்டாரில் தொழில் புரியும் பாலமுனைப் பிரதேசத்தவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பாகும்.
22 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago
02 Oct 2025