Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
பொதுத்தேர்தலின் பொருட்டு கடந்தமாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விஷேட முத்திரையிடப்பட்ட அஞ்சல் வசதியும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி. எம்.பி.ஆர். அபயரத்ன நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அவ்வறிவித்தலின் படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் பயன்பாட்டிற்கென வழங்கப்பட்ட விஷேட முத்திரையை தேர்தல் முடியும் வரை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவ்வாறு முத்திரைகள் இருக்குமே ஆனால் அதை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
தற்செயலாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கன விஷேட முத்திரை ஒட்டப்பட்ட கடிதம் அனுப்பப்படுமே ஆனால், அக்கடிதம் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும் என அஞ்சல் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
21 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
9 hours ago
02 Oct 2025