2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.கார்த்திகேசு, வி்.சுகிர்தகுமார்

பத்து வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் குண்டுமடு பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தலிங்கம் சுந்தரலிங்கம் (வயது-33) என்ற குடும்பஸ்தரே சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவராகும்.

இந்த நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தே நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .