Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜூலை 23 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் என்ன நடந்திருக்கின்றது. நல்லாட்சி என்ற பெயரில்; அடக்கு முறைகளே தலைத்தூக்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முண்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
கந்தளாவில் நேற்று புதன்கிழமை (22) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு துரோகம் இளைத்துவிட்டனர். இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு சென்று மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு களம் அமைத்து தந்தவர் முன்னாள் ஜனாதிபதியை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாது.
அவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் எதனை செய்திருக்கின்றது. இந்நல்லாட்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை எந்தத் திட்டமும் நிறைவேறாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago