2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணிச் சட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பிரதேசத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், கிராமமட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு காணிச் சட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு, வியாழக்கிழமை திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் மதியுரை பொன்.சச்சிவானந்தம் தலைமையில் இடம்பெற்றதுடன் காணிச் சட்டங்கள் தொடர்பான விளங்கங்களை ஓய்வுபெற்ற உதவி காணி ஆணையாளர் கே.குருநாதன் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் திருக்கோவில் பிரதேச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு காணிச் சட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களை அறிந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .