2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

“உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை’’ கட்டார்

Freelancer   / 2025 ஜூன் 23 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கட்டார் தெரிவித்துள்ளது.

அல் உதெய்து விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும், "ஆயுதப் படைகளின் விழிப்புணர்வு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு" நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்டார் வான்வெளி மற்றும் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க அதன் ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .