2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அதிகரிக்கும் போர் பதற்றம் : திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

Freelancer   / 2025 ஜூன் 23 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.

இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .