2025 ஜூன் 26, வியாழக்கிழமை

40 மீனவர்களுக்கு கருவாடு பதனிடும் உபகரணங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
 
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 40 மீனவர்களுக்கு  16 இலட்சம் ரூபா பெறுமதியான கருவாடு பதனிடும் உபகரணங்களை வேள்ட்விஷன் நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிவைத்துள்ளது.

திருக்கோவில் தாண்டியடி சமூக, பொருளாதார கலாசார அபிவிருத்தி ஒன்றிய காரியாலய மண்டபத்தில் வேள்ட்விஷன் நிறுவன திட்ட இணைப்பாளர் எல்.தயாளன் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், வேள்ட்விஷன் முகாமையாளர் ஜ.மைக்கல், பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் நவீதரன், பிரதேச செயலக கணக்காளர் கேசவன், சமுர்த்தி தள முகாமையாளர் பி.அரசரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .