Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மே மாத இறுதிக்குள் விதைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
42 minute ago
42 minute ago