Janu / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
டித்வா சூறாவளிப் புயல் ஒரு பலவீனமான ஆனால் பேரழிவு தந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளியாகும், நவம்பர் 26ஆம் திகதின்று ஆட்கொண்ட டித்வா, கரையை கடந்து டிசெம்பர் 26ஆம் திகதியுடன் ஒருமாதம் நிறைவடைந்தாலும், அதன் தாக்கத்திலிருந்து பலரும் மீண்டெழ முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.
டித்வாவுக்கு ஒரு மாதம் நிறைவடைந்த டிசெம்பர் 26ஆம் திகதியன்றுதான் சுனாமிக்கு 21 வருடங்கள் நிறைவடைந்தன. டித்வா மத்திய மலைநாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. கரைபுரண்ட வௌ்ளத்தால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆனால், கரையோரங்களை மட்டுமே புரட்டிப்போட்டது. சுனாமி பேரலையில் சிக்குண்டவர்களில் பலரும் பாதிக்கப்பட்டவர்களாவே இன்னுமிருக்கின்றனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் அறிவிக்கப்பட்ட ஆக ஆரம்பக்கட்டமாக வழங்கப்பட்ட 25,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறாதவர்கள் இருக்கிறார்கள். அத்துடன், எவ்விதமான பாதிப்புகளும் இன்றி, வெறுமனே வீட்டுக்கு அண்மையில் அல்லது கீழ் மாடியில் வெள்ளம் புகுந்தமைக்காக மேல் மாடியில் வசிப்போர் நிவாரணத்தொகையை வாங்கிய சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை பதுக்கி விற்பனைச் செய்த, பாதிக்கப்படாத தரப்பினர்களுக்கு இன்றேல் தங்களுடைய உறவினர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கிய பொறுப்புமிக்க அதிகாரிகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றின் ஊடாக இலங்கையில் பேரிடர் மேலாண்மையில் கடுமையான குறைபாடுகள் இருப்பது தெளிவாகியது.
அரசாங்க திணைக்களங்களில் மிகச் சரியான தகவல்கள் இல்லை என்பதை ஜனாதிபதியும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், ஒவ்வொரு திணைக்களங்களுக்கு இடையில் தகவல்களை பறிமாறிக்கொள்ளாமை பாரிய குறைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்டது. கிராம சேவகர்களிடம் புதுப்பிக்கப்பட்ட முறையான பதிவுகள் இருந்திருந்தால், ஆரம்பக்கட்ட நிவாரணமான 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விநியோகித்து முடித்திருக்கலாம்.
ஐ.நா மற்றும் பிற பங்குதாரர்களான உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட விரைவான தேவைகள் மதிப்பீட்டு அறிக்கையின் இரண்டாம் கட்டத்தின்படி, நாட்டில் உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடவும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 16 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதார இழப்பு, இடம்பெயர்வு மற்றும் சந்தைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு ஆகியவை குடும்ப உணவுப் பாதுகாப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களாகும்.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், மோசமான உணவு நுகர்வு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சதவீதம் சுமார் 3 சதவீதமாக இருந்தது.தினசரி கூலி பெறுபவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் உணவுப் பாதுகாப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.
சூறாவளியால் நாட்டின் பயிர் சாகுபடி, மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக இந்தத் துறைகளில் வேலை செய்யும் மக்களின் வருமானம் குறைந்துள்ளது.
அதிக ஆபத்தில் உள்ள குடும்பங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே காய்கறிகளை சாப்பிடுகின்றனர். இந்த நாட்டில் 70 சதவீத குடும்பங்கள் தாங்கள் விரும்பும் சத்தான உணவை சாப்பிடுவதில்லை என்றும், 35 சதவீதம் பேர் தங்கள் பசியைப் போக்கக் கோரப்பட்ட உணவை நம்பியிருக்கின்றனர்.
நாட்டில் 33 சதவீத குடும்பங்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகவும், 29 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். நாட்டில் 16 சதவீத குடும்பங்களில் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகவும், 32 சதவீத குடும்பங்கள் கடனில் உணவு வாங்கியுள்ளனர்.
31 சதவீத குடும்பங்கள் உணவு வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கடன் செலுத்துவதைத் தவிர்த்து உணவு வாங்கியுள்ளனர் என்றும், 26 சதவீத குடும்பங்கள் வங்கியில் இருந்து பணம் எடுத்துள்ளனர், தங்கப் பொருட்களை அடகு வைத்துள்ளனர் அல்லது கடன் கொடுப்பவரிடமிருந்து பணம் எடுத்து உணவு வாங்கியுள்ளனர்.
போதுமான உணவு மற்றும் பணம் இல்லாததால் 20 சதவீத குடும்பங்கள் தங்கள் தங்கப் பொருட்களை விற்றுள்ளனர். நாட்டில் 17 சதவீத குடும்பங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் தொகையைக் குறைத்துள்ளனர். இந்த நிலைமையில் இருந்து மக்களை பாதுகாக்கவேண்டுமாயின், அதிகாரிகளும், மக்களும் மிக நேர்மையாக இருக்கவேண்டும்.
2025.12.30
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago