Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 23 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய 68 வது வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (23) அன்று நடைபெற்றது.
புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 6 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்கள் தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடு இடம் பெற்றது. திருப்பலியினை அருட்தந்தை பிலிப் றஞ்சகுமா (O.M.I)அருட்தந்தை அடிகளார் தலைமை தாங்க பங்குத்தந்தை சுலக்சன் அடிகளாரும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறை வேண்டுதல் செய்திருந்தார்கள்.
திருப்பலி நிறைவில் புனித அந்தோனியார் திருச்சுரூப பவனியானது ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டதுடன் புனித அந்தோனியார் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித அந்தோனியார் திருச்சுரூப ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி சுலக்சன் அடிகளார் இறை மக்களுக்கு வழங்கி வைத்தார்.
அத்தோடு பங்குத்தந்தை அவர்களாலும், திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
31 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
31 Aug 2025