Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 02, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதலமைச்சர் பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக
வீடியோ வெளியிட்ட பா.ஜ.கவின் எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாகவும் முதலமைச்சர் பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்ற பிரிவு பொலிஸார் எஸ்.வி. சேகரிடம் விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து முன் பிணை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடியை அவமதித்ததற்கு எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, செப்.7 வரை எஸ்.வி. சேகரை கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன் பிணை வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago