2025 ஜூன் 04, புதன்கிழமை

துசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

Janu   / 2025 ஜூன் 02 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை விளக்கமறியல் உத்தரவு நாளை புதன்கிழமை (04) வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (02) அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் துசித ஹல்லொலுவ, கடந்த மே மாதம் 30ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .