A.K.M. Ramzy / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
மக்கா நகரில் உள்ள புனித தலத்துக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரைக் காகச் செல்லுகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு புனித பயண ஏற்பாடுகள் குறித்த ஹஜ் குழுக் கூட்டம் நேற்று மும்பையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-
2021ஆம் ஆண்டு மக்கா புனித பயணத்துக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 10ஆம் திகதி கடைசி நாள். விண்ணங்களை ஒன்லைன் அல்லது ஹஜ் மொபைல் அப்ளிகேசன் மூலம் செய்யலாம். புனித பயணத்துக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற ஆர்.டி- பி.சி.ஆர் சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .