2026 மார்ச் 07, சனிக்கிழமை

இலங்கை கடற்படைக்கு இந்தியா உதவி

Editorial   / 2021 மார்ச் 18 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படைக்கு திறன் மேம்பாட்டுக்கான 22 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பயிற்சி தொகுதிகளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே கையளித்துள்ளார்.

வட, கிழக்குக்கான விஜயமொன்றின்போதே, திருகோணமலை கடற்படை அகடமியில், கடந்த வாரயிறுதியொன்றின்போது நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கான தளபதியிடம் உத்தியோகபூர்வமாக பயிற்சித் தொகுதிகளை பாக்லே கையளித்திருந்தார்.

இலங்கை கடற்படைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான பயிற்சித் தொகுதிகளை வழங்குவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்ந்தியக் கடற்படைப் பிரதானி அட்மிரல் கரம்பிர் சிங் உறுதியளித்தாக, அறிக்கையொன்றில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .