2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஐல்லிக்கட்டுப் போட்டிக்கு டோக்கன் பெற 10 பெண்கள்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பரங்குன்றகெர்

 ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் டோக்கன் பெற வரிசையில் நின்றனர்.இதன்போது சுமார் பத்துப் பெண்களும் வரிசையில் நின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியது.

இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த காளைகளின் உரிமையாளர்கள் அவனியாபுரம் பி.எம், எஸ் பள்ளியில் காத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .