A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 இலட்சத்து 91 ஆயிரத்து 310 என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது நடத்தப்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளதென தெரிய வந்துள்ளது. 1.4.2016ஆண்டு முதல் 31.3.2021ஆண்டு வரையில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயர் முதலாவதாகவும், ரம்யாவின் பெயர் இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளது.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
1 hours ago