2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சென்னையில் ரஜினி மீண்டும் ஆலோசனை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

  நடிகர் ரஜினிகாந்த் நேற்று  கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிய கட்சிப் பணிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 எதிர்வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதால் எதிர்வரும்  31 ஆம் திகதி  அதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும் மேற்பார்வையா ளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். தொடர்ந்து,   பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .