2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’தமிழகத்திலும் ஹிட்லர் வாரிசுகள்’

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

 'தமிழகத்திலும் ஹிட்லர் வாரிசுகள் உள்ளனர்' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹசன் தனது  டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

'ஒரு மேடைப்பேச்சு, ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஒரு அடி தடி கலவரம், ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்கு சமம்' என்கிறார் ஹிட்லர். இங்கும் ஹிட்லர் வாரிசுகள் உண்டு.தேர்தல் சமயத்தில் எப்படியாவது, பிற மதத்தவர்களின் உணர்ச்சிகளை துாண்டி,மதக் கலவரங்களை உருவாக்கி, ஓட்டுகளை அறுவடை செய்யும் முயற்சிகள், இங்கும் நிகழ்கின்றன.

சமத்துவமும், சமூகநீதியும் பேசும் தமிழகத்தில், உங்கள் சதித்திட்டங்கள், என் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.இவ்வாறு, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹசன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .