Freelancer / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள், கன்றுக்குட்டி ஒன்றை கடந்த 1965-ம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக அவர் பொலிஸில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர். இருவரில் ஒருவர் 2006-ம் ஆண்டு இறந்துபோனார்.
மற்றையவர், 1965-ம் ஆண்டு கைதான போது அவருக்கு வயது 20. சில மாதத்திலேயே பிணையில் வந்த அவர், 57 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் 77 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago