A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத்
பிரபல நடிகர் ராஜசேகர், அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா, 2 மகள்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது.
இதையடுத்து 4 பேரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஜீவிதா மற்றும் இருமகள்களும் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நடிகர் ராஜசேகர் மட்டும் தொடர்ந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து நடிகை ஜீவிதா ஹைதராபாத்தில் கூறும்போது, "எனது கணவர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குண மடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப் படுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .