Freelancer / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் நிபா வைரஸை தொடர்ந்து புரூசெல்லோசிஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் நிபாவினால் 6 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவிய நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் நிபா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது.
இந் நிலையில், தற்போது 'புரூசெல்லோசிஸ்' என்ற புதிய வைரஸ் பரவி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் புரூசெல்லோசிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட தந்தையும் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவகூடிய புரூசெல்லோசிஸ் நோய் மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
20 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
48 minute ago
2 hours ago