Ilango Bharathy / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்திரபிரதேசம், டியோரியா மாவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி திருமண வைபவமொன்று நடைபெற்றுள்ளது.
இத்திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில் மணமக்களுடன் யார் முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்வது ? என்பதில் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்துள்ளது.
இச்சம்பவத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இம்மோதலில் மாப்பிள்ளையின் தங்கை மற்றும் உறவினர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராம்பூர் பொலிஸார் இருவீட்டாரையும் சமாதானம் செய்து வைத்ததோடு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் கோபமடைந்த மணமகன், முதலில் திருமணம் வேண்டாம் எனக் கூறியுள்ள நிலையில், பின்னர் மனம் மாறி திருமணம் செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago