2026 மார்ச் 07, சனிக்கிழமை

பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 07 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு  அருகேயுள்ள  சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்றுள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்து அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .