Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா கும்பமேளா பெப்ரவரி 26ஆம் திகதிக்கு பிறகும் நீட்டிக்கப்படும் எனப் புரளிகள் கிளம்பியுள்ளன.
சமூகவலைதளங்களிலும் இந்த நீட்டிப்பு மீதானத் தகவல்கள் பல்வேறு வகையில் பரவி வருகின்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பிரயாக்ராஜ் மாநகரக் காவல்துறையின் கூடுதல் ஆணையரும் தமிழருமான டாக்டர் என்.கொளஞ்சி கூறும்போது,
“பண்டிதர்களால் பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்விற்கு பின் முடிவானது பிப்ரவரி 26 மகா சிவராத்ரி நாளுடன் முடிவடைகிறது. எங்கள் முதல்வர் தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் பொதுமக்களுக்கு பிரச்சினை வராமல் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
“அத்துடன், மகா கும்பமேளாவினால் பிரயாக்ராஜ் வாசிகளுக்கும் எந்த இடையூறும் வராதபடி நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
“மகா கும்பமேளா பற்றி பரவும் வதந்திகளையும் உடனடியாக விசாரித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். பிரயாக்ராஜின் ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. முன் அறிவிப்பின்றி இதுபோல் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
“கும்பமேளா நாட்களில் நடைபெற்ற தேர்வை தவறவிட்ட சில மாணவர்களுக்கு அவற்றை எழுத வாய்ப்பு அளிக்கவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது” எனத் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago