2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

80 வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்தவரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

Editorial   / 2025 ஜூன் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடலூர் மாவட்​டம் பண்​ருட்​டியை அடுத்த தராசு கிராமத்​தைச் சேர்ந்​தவர் கவுசல்யா (80). இவர், திங்கட்கிழமை (16) மாலை​யில் புல​வனூர் சாலை​யில் நடைப​யிற்சி மேற்​கொண்​டிருந்​த​போது, அங்கு மது அருந்​திக் கொண்​டிருந்த 2 இளைஞர்​கள் மூதாட்​டியை சவுக்​குத் தோப்புக்​குள் இழுத்துச் சென்​று, அவரை பாலியல் வன்​கொடுமை செய்​து, அவர் அணிந்திருந்த நகைகளை​யும் பறித்​துக் கொண்டு தப்​பியோடி​னர்.

சவுக்​குத் தோப்​பில் மயங்​கிய நிலை​யில் இருந்த மூதாட்டியை அப்​பகு​தி​யினர் மீட்​டு, கடலூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். கடலூர் மாவட்ட எஸ்​.பி. உத்​தர​வின்​பேரில், ஆய்​வாளர் வேலுமணி தலை​மை​யில் தனிப்​படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தில் தொடர்​புடைய ஒருவர் மேல்​மாம்பட்​டில் ஒரு முந்​திரி தோப்பில் பதுங்​கி​யிருப்​ப​தாக பொலிஸாருக்கு தகவல்கிடைத்​தது.

இதையடுத்​து, செவ்வாய்க்கிழமை (17) காலை அங்கு சென்ற பொலிஸார், பண்​ருட்டி எஸ்​.கே. பாளை​யத்​தைச் சேர்ந்த சுந்தர​வேல் (25) என்​பவரைப் பிடிக்க முயன்​றனர். அப்போது அவர், வீச்​சரி​வாளால் காவலர் குபேந்​திரனின் வலது கையில் வெட்​டி​விட்​டு, மற்றொரு காவலர் ஹரிஹரனை வெட்ட முயற்​சித்​தார். உடனே, ஆய்​வாளர் வேலுமணி, துப்​பாக்​கி​யால் சுந்​தர​ வேலுவை சுட்​டுப் பிடித்​தார். காயமடைந்த காவலர் குபேந்​திரன் பண்​ருட்டி அரசு மருத்​து ​வ​மனை​யிலும், சுந்​தர​வேல் முண்​டி​யாம்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யிலும் சேர்க்​கப்​பட்​டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .