2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 08ஆம் நாள் (25.10.2011) செவ்வாய்க்கிழமை. சித்த யோகமும் திரயோதசி திதியும் ஹஸ்தம் நட்சத்திரம் காலை 12.41 மணிவரை பின்பு சித்திரை.

ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை
எமகண்டம்:  காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்
அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், குடும்பத்தில் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும்.
அஸ்வினி: ஆதரவு
பரணி: புத்துணர்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
கடின வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும், தொழில் முயற்சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
கிருத்திகை 2, 3, 4: தோல்வி
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்


மிதுனம்
வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், தனதான்ய விருத்தி, நல்ல செய்திகள் வந்து சேரும்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: புதிய நுட்பம்


கடகம்
வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படுதல்.
புனர்பூசம்: பின்னடைவு
பூசம்: விருப்பமின்மை
ஆயில்யம்: கலைப்பு


சிம்மம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரலாம், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மகம்: அந்நியோன்யம்
பூரம்: மன அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: வழிபாடுகள்


கன்னி 
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், இறை வழிபாடுகளில் அதிக அக்கரை செலுத்தவும்.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: ஆச்சரியம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பிரார்த்தனை


துலாம்
குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் நவீன வேலைகளை மேம்படுத்தல், பொருள் சேர்க்கை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதி
சுவாதி: வரவு
விசாகம் 1, 2, 3: உற்சாகம்


விருட்சிகம்
தேவையற்ற பிரச்சினைகளுக்கு முன்னிற்பதனால் துன்பம், திருடர்களினால் மன பயம் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
விசாகம் 4: அவதானம்
அனுசம்: கலக்கம்
கேட்டை: சிக்கல்


தனுசு
தெய்வீக சிந்தனைகள் பிரார்த்தனைகள் உற்சாகம் தரும், அரசாங்க உதவிகள் கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல். 
மூலம்: நட்பு
பூராடம்: சலுகை
உத்திராடம் 1ஆம் பாதம்: இறை நம்பிக்கை


மகரம்
பெண்களுடன் அனுசரித்து செயற்படுவது நன்மைக்கே, சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.
உத்திராடம் 2, 3, 4: தேகசுகம்
திருவோணம்: மனக் கஷ்டம்
அவிட்டம் 1, 2: பொறுமை


கும்பம்
தொழில் ஸ்தானத்தில் இலாபம் அதிகரிக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
அவிட்டம் 3, 4: நற்செய்தி
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: செலவு


மீனம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படாது, மனக் கவலைகள் ஏற்படும், சில விதமான சிக்கல்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: நட்டம்
உத்திரட்டாதி: சோர்வு
ரேவதி: துக்கம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .