Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 01 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (01.11.2011)
இன்று கர வருடம் ஐப்பசி மாதம் 15ஆம் நாள் (01.11.2011) செவ்வாய்க்கிழமை சித்த யோகமும் ஷஷ்டி திதியும் பூராடம் நட்சத்திரம் மாலை 04.36 மணிவரை பின்பு உத்திராடம்.
ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
சுற்றுலாப் பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
அஸ்வினி: சலுகை
பரணி: அனுகிரகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சந்தோஷம்
இடபம்
வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், சில விதமான மனசங்கடங்கள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: மந்த நிலை
ரோகிணி: சுகயீனம்
மிருகசீரிடம் 1, 2: கவலை
மிதுனம்
அரசாங்க ஊழியர்களினால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகூலம்
திருவாதிரை: அதிர்ஷ்டம்
புனர்பூசம்: நன்மை
கடகம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
புனர்பூசம்: உயர்வு
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: மகிழ்ச்சி
சிம்மம்
தூரப் பிரயாணங்கள் செல்வதனால் மன அமைதி, நவீன வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.
மகம்: நிம்மதி
பூரம்: சலுகை
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
கன்னி
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேலதிகாரிகளுடன் மனக் கசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: ஆசீர்வாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புத்துணர்ச்சி
சுவாதி: மனநிம்மதி
விசாகம் 1, 2, 3: குதூகலம்
விருட்சிகம்
தடைப்பட்டிருந்த காரியங்களை உடனுக்குடன் முடித்தல், நல்ல செய்திகள் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: ஆதாயம்
கேட்டை: நட்பு
தனுசு
இசையில் அதிக ஆர்வம் செலுத்தல், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
மூலம்: நன்மை
பூராடம்: சந்தோஷம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஆறுதல்
மகரம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், பகைவர்களினால் சில இடையூறுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: வரவு
திருவோணம்: உபதேசம்
அவிட்டம் 1, 2: கவலை
கும்பம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மை, உற்சாகத்துடன் புதிய முயற்;சிகளில் ஈடுபடல்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: பிராத்தனைகள்
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி
மீனம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், திறமையான சாதனைகளினால் வெற்றி.
பூரட்டாதி 4: முன்னேற்றம்
உத்திரட்டாதி: நட்பு
ரேவதி: அந்நியோன்யம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .