2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

அங்காடியில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி (வீடியோ)

S.Renuka   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஹோலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (18) அன்று ஒரு நபர் தானியங்கி துப்பாக்கியுடன் சரமாரியாகச் சுட்டபடி வீதிக்குள் புகுந்ததில் வீதியில் சென்ற நான்கு பேர் அதே இடத்தில் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டார். சூப்பர் மார்க்கெட்டிற்குள்ளும் அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உக்ரைனின் சிறப்பு அதிரடிப்படை பொலிஸார், அந்த நபருடன் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

“மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய வேண்டாம், அவர்களை விடுவித்தால் நாம் பேசலாம்” என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆனால், அந்த நபர் பொலிஸாருக்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வந்ததால், பணயக்கைதிகளின் உயிரைக் காப்பாற்ற அதிரடியாகத் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டது. பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்தத் துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .