2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் நேர்ந்த சோகம்

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலண்ட் கேப், துருக்கி நாட்டின் வடமேற்கே போலண்ட் கேப் பகுதியில் வசித்து வருபவர்  நிஜாமதீன் குர்சு. இவர் எசிம் டெமிர் (வயது 39) என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் இந்த இளம் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தள்ளது.

அதனை கொண்டாட முடிவு செய்த அவர்கள் மலை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர்  மலை உச்சிக்கு ஏறி சென்ற அவர்கள் உணவு மற்றும் மதுபானம் குடித்து கொண்டாடியுள்ளனர். இதன்பின்பு, சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து குர்சு தனது காருக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், அவரது காதலி டெமிர் அவருடன் வரவில்லை. அப்போது, திடீரென பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக அவர் மலை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது வருங்கால மனைவி  மலையில் இருந்து 100 அடி  பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .