2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை

Editorial   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் விவசாய மற்றும் கிராமிய  விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சர் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் டொங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் உள்ளூர் அளவில் அவர் வகித்த பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 
வணிக நடவடிக்கைகள், திட்ட ஒப்பந்தம் மற்றும் வேலை வழங்குதல் போன்ற விடயங்களில் சட்டவிரோதமாக மொத்தம் 268 மில்லியன் டொலர் ரொக்கமாகவும் மதிப்புமிக்க பொருட்களாகவும் அவர் பெற்றுள்ளார்.  

இந்த வழக்கை விசாரித்த வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுனின் இடைநிலை நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து நேற்று தீா்ப்பளித்தது. மேலும், அவரது அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X