2025 மே 16, வெள்ளிக்கிழமை

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை

Janu   / 2023 ஜூன் 28 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டதில் இதுதான் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உயிரினங்கள் வசிக்கக்கூடிய பூமி, சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். சூரியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்து பால்வெளி அண்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கண்டுபிடித்திருந்தனர். நடைமுறையில் இருக்கும் இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு கருந்துளைகள் செயல்படுகின்றன. இதனை கடந்து செல்லும் எதனையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆற்றல் கருந்துளைக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியனைக்கூட இவை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூரியனை விடவும் 30 பில்லியன் மடங்கு பெரியதான கருந்துளை ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும். பென்ட் லைட் எனப்படும் அறிவியல் முறை மற்றும் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .