Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மிக முக்கிய துறையான உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்த கிறிஸ்டி நோம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் சமூக வலைதள சர்ச்சைகளால் பதவியை இழந்தார். அவருக்கு பதிலாக, முன்னாள் மல்யுத்த வீரரும், எம்.பி.யுமான மார்க்வேன் முல்லினை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
13 ஆண்டுகள் பாராளுமன்ற அனுபவம் கொண்ட இவர், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். புதிதாக பொறுப்பேற்கும் மார்க்வேனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை ஒட்டுமொத்தமாக திரட்டி நாடுகடத்தும் டிரம்ப்பின் 'மெகா' திட்டத்தை இவர் செயல்படுத்த வேண்டும்.
மேலும், நிதி நெருக்கடியால் சம்பளம் இன்றி தவிக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் பிரச்சினை மற்றும் முடங்கிக் கிடக்கும் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி பேரிடர் மீட்பு நிதியை விடுவிப்பது போன்ற இக்கட்டான பணிகளை இவர் கவனிக்க வேண்டியுள்ளது. மல்யுத்த களத்தில் எதிரிகளை வீழ்த்திய முல்லின், இப்போது அமெரிக்காவின் பாதுகாப்பு சவால்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை உலகமே உற்று நோக்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .