Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரேக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது எனக் கருதப்படும் வாகனமொன்று, துருக்கியின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட 22 பேர், நேற்று முன்தினம் (14) பலியாகினர்.
குறித்த வாகனம், லொறியென வர்ணிக்கப்படுவதுடன், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, திடீரெனத் தடம்புரண்டு, கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்துள்ளது.
இதன்போது, உயிரிழந்த 22 பேரைத் தவிர மேலும் 13 பேர், காயமடைந்தனர்.
குறித்த வாகனத்தின் சாரதி, காயங்களுடன் உயிர்தப்பியுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைகளின் பின்னர், அவர் கைதுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
32 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago